கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர்.
நடிகர் சந்தானம் ஏற்கனவே நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழ் திரையுலகில் டைமிங் காமெடி செய்வதில் சந்தானத்தை தவிர தற்போதைக்கு யாரும் இல்லை. நாகேஷ், கவுண்டமணி, செந்தில்,விவேக், வடிவேல் என பல நகைச்சுவை நடிகர்கள் கால மாற்றத்திற்கேற்ப தமிழ் சினிமாவில் கண்டு வருகிறோம். அவ்வகையில் தனக்கென தனி டிரண்டில் பயணிக்கிறார் சந்தானம்.
தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவருக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு பெரிய தொகையை கட்டிட காண்டிராக்டர் சண்முகசுந்தரத்திடம், நடிகர் சந்தானம் கொடுத்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த பணி நின்று போனதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தான் கொடுத்த பணத்தை நடிகர் சந்தானம் கேட்டபோது பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள கட்டிட காண்ட்ராக்டரின் அலுவலகத்தில் தனது மானேஜருடன் சென்று பணத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மாறி, மாறி தாக்கி கொண்டதில் கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் நடிகர் சந்தானம் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.