BIG BOSS 6: பணப் பையில் இருந்த பணத்துடன் வெளியேறிய கதிர் எவ்வளவு சம்பாதித்தார்

0
10

BIG BOSS 6: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் பணப் பையுடன் தொலைக்காட்சி தொகுப்பாளர் கதரவன் வெளியேறியுள்ளார். இதை அனைவரும் வியந்தும் பாராட்டியும் வருகின்றனர். பணப் பையில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணமும் அவருக்கு வழங்கப்பட்ட சம்பள விவரமும் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் இதுவரை 5 சீசன்களை முடித்து 6வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உலக நாயகன் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதன் முறையாக 21 நபர்கள் களமிறக்கப்பட்டனர்.

ஓவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் குறைவான நபர்களை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். இதுவரை ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோலார், நிவாஷினி, ஷெரினா, ராம், ஆயிஷா, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, மணிகண்டா, ஏடிகே உள்ளிட்ட பலரும் வெளியேறியுள்ளனர்.

BIG BOSS 6: பணப் பையில் இருந்த பணத்துடன் வெளியேறிய கதிர் எவ்வளவு சம்பாதித்தார்

நூறு நாட்களை கடந்துள்ள நிலையில் விஜே கதிரவன் பணப் பையுடன் வெளியேறியுள்ளார். இதுவரை இருந்த நிகழ்ச்சியிலேயே இதுதான் மிகவும் போரிங்காக இருந்ததாக பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது, மைனா, ரச்சிதா, அசீம், விக்ரமன், அமுதவாணன், ஷிவின் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இம்முறை பணப் பெட்டிக்கு பதிலாக பணப் பை அறிவிக்கப்பட்டது. இந்த பணப்பையை கதிரவன் எடுத்து சென்றுள்ளார். அதில் மூன்று லட்சம் ரூபாய் பணம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு சம்பளமாக 20 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் இதனால் மொத்த தொகை 23 லட்சம் ரூபாயை கதிரவன் சாதுர்யமாக எடுத்து சென்றுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: BIGG BOSS TAMIL 6: விதிகளை மாற்றிய பிக்பாஸ் நாமினேஷ்னல் லிஸ்ட்

இந்த சீசனில் யார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here