சூர்யாவின் 42வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவா அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா 42 படத்திற்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே களமிறக்கப்படுவார் என்று தகவல் வந்த நிலையில் திடிரென பாலிவுட் நடிகை திஷா பட்டாணியை நடிக்க வைப்பதாக தகவல் வந்துள்ளது.
சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் சிவா. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படத்தையே செம்ம மாஸாக எடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்த சிவாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் வீரம் திரைப்படம்.
மேலும் அஜித் கூட்டணியை தக்க வைத்த சிறுத்தை சிவா தொடர்ந்து வேதாளம், விவேகம் என வெற்றி படங்களை தந்தார். இந்த இரண்டு படங்களை விட அடுத்த படமே பெரும் வெற்றியை கண்டது. அது விஸ்வாசம் அந்த படத்தின் மூலம் சிவா வெற்றி படங்கள் தருவதில் கம்பேக் கொடுத்தார்.

இதையடுத்து ரஜினியுடன் கூட்டணி அமைத்த சிவா, அவர் நடித்த அண்ணாத்த படத்தை இயக்கினார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது. இதன்பின்னர் நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைக்க உள்ளார் இயக்குனர் சிவா. சூர்யாவின் 42-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
நடிகர் சூர்யாவுடனும் முதன் முறையாக தமிழ் படத்தில் நடிக்க வருகிறார் திஷா. மேலும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பதும் கூடுதல் தகவலாக அமைந்துள்ளது.