தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. மின் கட்டணம் உயர்த்துவதற்கான காரணத்தையும் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விவரித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தா விட்டால், கடன் எதுவும் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கிகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. ஆதலால், ஏழை எளிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் பற்றிய முக்கிய தகவல்கள்
- தமிழகத்திற்கு தற்போது வரை இலவசமாக கொடுக்கப்படும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
- வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர்.