இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராசபக்சே என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இப்பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக ஆளும் ஆட்சியாளர்கள் தான் என பல குற்றங்களை மக்கள் அந்நாட்டு ஆளும் அரசு மீது வைக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து அதிபர் மாளிகை முன் நடத்தினர். இது இலங்கை அரசை நிலை குலைய செய்தது. மக்கள் பெரும் திரலாக் கூடி வெகுண்டெழுந்து அதிபர் மாளிகையை கைப்பற்றினர். பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்ட காவல் துறைக்கும் மக்களுக்கும் மத்தியில் பெரும் வன்முறை வெடித்தது.

இதன் ஓருபகுதியாக இலங்கை அதிபர் ராஜபக்சே வேறு நாட்டிற்கு ஓடினார். பின் கோத்தபய ராஜபக்ச முதலில் மாலத்தீவு சென்று பதுங்கினார். இதை அறிந்த அந்நாட்டில் வாழும் இலங்கை மக்கள் போராட்டம் செய்தனர். இதனால் சிங்கப்பூர் சென்றார். தற்போது துபாய் செல்ல உள்ளதாகவும் தகவல்களை இலங்கை நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே வந்துள்ளார்; அவருக்கு அடைக்கலம் தரவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா கொடுத்த தகவலின்படி, இலங்கையின் 8 வது அதிபர் கோட்டபயவின் ராஜினாமா கடிதம் அதிகாரப்பபூர்வமாக தெரிவித்தார்.