விஜய் அஜித் இருவரையும் வைத்து படம் எடுக்க தயாராக உள்ளேன்-வெங்கட் பிரபு. குறும்பட போட்டிக்கான விருது வழங்கும் விழாவில் இயக்குனர் வெங்கட் பிரபு பேச்சு.
சினிமாவுக்கு மொழி முக்கியமில்லை என்பதற்கு பிரபுதேவாவும், இயக்குனர் முருகதாஸ் அவர்களின் வெற்றி படங்கள் மிகப் பெரும் உதாரணம். விஜய், அஜித் அவர்கள் ஓப்புக் கொண்டால் இருவரையும் வைத்து படம் எடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப் பெரும் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்கள் ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியாக இந்த இருவரின் ரசிகர்கள் தான். இன்றுள்ள இளைஞர்கள் அனைவரும் இந்த இருவரின் தீவிர ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறியாமல் ரசிகர்கள் உன்னை விட இவர் பெரியவர் உயர்ந்தவர் என்று போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டு உள்ளனர்.

இவர்கள் இருவருமே மக்களை மகிழ்விக்க நடிகர்களாக வருபவர்கள் ஆனால், அதை அறியாமல் சிலர் உன் தலைவர் பெரியவர் என் தலைவர் என்று கூச்சல் போட்டு வருகின்றனர். இந்த இருவரின் படங்களும் திரைக்கு வந்தால் தியேட்டர் முழுக்க விசில் சத்தம் பெரிய அளவில் விண்ணை பிளக்கும்.
சென்னையில் நடைப்பெற்ற குறும்பட விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் வசந்த், வெங்கட் பிரபு சிம்பு தேவன் கலந்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
மேலும், எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குனர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குனருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. 82 வயதிலும் படம் இயக்குகிறார்கள்.
கோவா படத்திற்கு ஹாலிடே என்று டேக் வைத்தோம். மங்காத்தா படத்திற்கு கேம் என்று வைத்தோம். அப்படியே மாநாடு படத்திற்கு பாலிட்டிக்ஸ் என்று வைத்தோம். எல்லா படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மற்றும் டேக் வைப்பது வெங்கட்பிரபுவின் பாணி என்றானதால். அதைப் பின்பற்றி வருகிறேன் என்றார்.