இயக்குநர் வெங்கட் பிரபுவின் நீண்ட கால ஆசை நிறைவேறியது

0
4

இயக்குநர் வெங்கட் பிரபுவின் நீண்ட கால ஆசை நிறைவேறியதாக தெரிவித்துள்ளார். முதன் முறையாக தான் இயக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசைப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும் கூறியுள்ளார்.

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து சரோஜா, கோவ, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, மன்மத லீலை என பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் நீண்ட கால ஆசை நிறைவேறியது

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். தற்காலிகமாக என்சி 22 என குறிப்பிடப்படும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளனர். இளையராஜா மற்றும் யுவன் இணையும் படம் இதுவே முதலாக இருக்கிறது.
இந்நிலையில் வெங்கட் பிரபுவுக்கு தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”வாழ்த்துகள் வெங்கட்பிரபு. நானும் உன் தந்தையும் இருந்தும், யாருடைய உதவியும் இல்லாமல், நீயாகவே வளர்ந்து படங்களை இயக்கி திரையுலகில் மிகப்பெரிய இடத்தையும் பெயரையும் பெற்றுள்ளாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here