தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகாலபைரவரை வழிபடும் முறைகள்

0
8

தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகாலபைரவரை வழிபடும் முறைகள் ஈசனின் அம்சமாக காணப்படுபவர் பைரவர். காலத்தை கணக்கிடுபவராக உள்ளதால் அவரை காலபைரவர் என்பர். மனிதனின் மனதில் உள்ள துன்பத்தை போக்குபவராகவும் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பவராகவும் திகழ்பவர். அவரை பக்தர்கள் விரதம் இருந்தும் மிளகு தீபம் ஏற்றியும் வணங்குவர். அதிலும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் விரதமிருந்து அவரது பாடல்களை மனமுறுகி பாடியும் அவரை கோவிலில் சென்று  வழிப்பட்டும் வந்தால் சகல கஷ்டங்களும் தீரும் என்பது நம்பிக்கை.

தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை வணங்குவது சிறப்பானதாகும். பைரவருக்கு அஷ்டமி திதி உகந்ததாக காணப்படுகிறது. சனி பகவானின் குரு காலபைரவராக உள்ளார். காலபைரவரை வழிப்படுவது நமக்கு பாதுகாப்பானதாவும் கருதப்படுகிறது. பக்தர்களின் பயத்தைப் போக்குபவராகவும் பைரவர் பார்க்கப்படுகிறார்.

தலைவிதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர் காலபைரவர். சிவபெருமானின் அம்சமாக கருதப்படுவதால் காசி நகரின் காவல் தெய்வமாகவும், நவகிரகங்களையும் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவராகவும் இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகாலபைரவரை வழிப்படும் முறைகள்

சனீஷ்வரரின் குரு

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.

பைரவருக்கு உகந்த நாட்கள்

படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களையும் இடைவிடாது செய்யுபவராக இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். முத்தொழிலும் செய்வதால் அவருக்கு திரிசூலம் ஆயுதமாக இருக்கிறது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் பைரவருக்கு உகந்த நாட்கள் ஆகும். வாரத்தின் அனைத்து நாட்களும் பைரவரை வணங்கும் நாட்கள் தான். ஆனால், தேய்பிறை மற்றும் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதி அன்றும்  செவ்வாய் கிழமைகளில் வரும் அஷ்டமியில் பைரவரை  வழிப்படுவதும் மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

ஸ்ரீபைரவரை அமாவாசை, பெளர்ணமி நாட்கள், வளர்பிறை, தேய்பிறை நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமை இராகு காலத்திலும், வளர்பிறை தேய்பிறை பிரதோஷ காலங்களிலும் வணங்கி வழிப்பட நன்மைகள் உண்டாகும்.

காவல் தெய்வமாக பைரவர்

அனைத்து சிவன் கோவில்களிலும் காக்கும் கோவிலின் சொத்துக்களை காக்கும் கடவுளாகவும் பைரவர் விளங்குகிறார். காலையில் கோவில் நடை திறந்ததும் பைரவருக்கு தீபாரதனை நிகழும். அதைபோல இரவு கோவில் நடை சாத்தப்படும் போதும் பைரவருக்கு தீபாராதனை காட்டப்படுவதும் கோவில் கதவு சாவியினை அவரது மடியில் வைத்து பின் கோவிலை மூடுவதும் பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் நடைப்பெறும் நிகழ்வுகளில் ஓன்றாக உள்ளது. சிவன் சொத்துக்களை காக்கும் காவல் அதிகாரியாகவும் ஸ்ரீகாலபைரவர் திகழ்கிறார்.

ஸ்ரீமகா பைரவரின் வரலாறு

அந்தகாசுரன் என்னும் அரக்கன் ஓருவன் தேவலோகத்தில் தேவர்களையும் சிவமுனிவர்களையும் அச்சுருத்தி வந்தான். அவனது இன்னல்களை பொறுக்க முடியாமல் அவதியுற்ற தேவகனங்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அந்த அந்தகாசுரனை வதம் செய்யவதற்காக சிவபெருமான் தன் திருமுகங்களில் ஓன்றான நெற்றிக்கண் மூலம் ஸ்ரீமகா பைரவமூர்த்தியை தோற்றுவித்தார். அதன்படி முனிவர்களையும் தேவர்களையும் பாதுகாத்து அந்தகாசுரனை பைரவர் வதம் செய்து அருளினார். மேலும், கர்வம் தலைக்கேறிய பிரம்மதேவரின் தலையை கொய்தவரும் பைரவமூர்த்தி தான்.

தாருகாவனத்தை சிவபெருமான் அழித்த போது அவரின் கோபம் அக்னி ஜூவாலையாய் பரவியது இதை பொறுக்க முடியாமல் சூரிய தேவனும் ஓடி ஓளிந்து கொண்டான். அப்போது இந்த உலகமே இருண்டு கருமை நிறம் வானை முட்டி நின்றது. அப்போது பைரவர் தோன்றி எட்டுத் திசைகளிலும் தோன்றி ஓளியை உண்டாக்கினார். அவ்வாறு தோன்றிய எட்டு பைரவர்களையே அஷ்ட பைரவர் என்கின்றன சாத்திர நூல்கள்.

சக்தி புராணத்தில் கால பைரவர்

புராண காலத்தில் ஈசனின் மனைவியான தாட்சாயிணி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமானப் படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த சிவ பெருமான். தாட்சாயிணியின் உடலை கையில் ஏந்திய வாறு கோபமாக திரிந்த போது, அந்த சிவ பெருமானை அமைதிப்படுத்த திருமால் தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை பல துண்டுகளாக அறுத்து இந்த பாரத தேசமெங்கும் தேவியின் அந்த உடல் துண்டுகளை விழச் செய்தார். அந்த இடங்கள் இப்போது சக்தி பீட கோவில்களாக உள்ளன.

இப்போது அம்மனின் சக்தி பீடங்களாக இருக்கும் அந்த புண்ணிய தளங்களை, சிவ பெருமானே பைரவர் வடிவம் தரித்து காவல் புரிவதாக கருதப்படுகிறது. இந்த பைரவர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் ஆவார். நவகிரகங்களின் பிராணனாக பைரவர் இருப்பதால், நவ கிரகங்களில் எந்த ஒரு கிரக பெயர்ச்சிகளால் தீய பலன்கள் வந்தாலும்… பைரவரை வழிபடலாம். நிச்சயம் நற்பலன் கிடைக்கப்பெறும். மேலும், கால பைரவரை பக்தியுடன் வழிபடுவதால் வழக்குகள் கூட சாதகம் ஆகும். முக்கியமாக செய்வினை கோளாறுகள் அகலும். எதிரிகள் பணிவார்கள். மற்றபடி, பைரவர்களில் கால பைரவர் மிகவும் விஷேஷமானவர்.

காசியில் கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

அஷ்ட பைரவர்கள்

  1. ருரு பைரவர்
  2. சண்ட பைரவர்
  3. குரோதன பைரவர்
  4. உன்மத்த பைரவர்
  5. சம்ஹார பைரவர்
  6. பீக்ஷன பைரவர்
  7. கபால பைரவர்
  8. அசிதாங்க பைரவர்

ஆடிமாத தேய்பிறை அஷ்டமி பலன்கள்

ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நீலகண்டாஷ்டமியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் அதிகாலை எழுந்து சுத்தமாக நீராடி வீட்டில் இருக்கும் தெய்வத்தை பூஜை செய்து வர வேண்டும். பின் ஆகாரம் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று பைரவப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகங்களையும் ஆராதைனைகளையும் தரிசித்து மனதார வணங்குதல் நல்லது.

கால பைரவர் வழிபாடு நம்மை எல்லா வகையான கெடுதல்களில் இருந்தும் காப்பாற்றும். கால பைரவர் வழிபாடு நமக்கு அரண் போன்றது. பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காலபுருஷர் ஸ்ரீகாலபைரவர்

உலகில் தோன்றி வளர்ந்து வரும் சகல உயிரினங்களும் வானில் உலா வருகின்ற சூரியன் முதலான நவகோள்களின் ஆளுமைக்குட்பட்டு இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றன. அந்த நவகோள்களையும், காலச்சக்கரத்தின் நியதிப்படி, நடத்தி வருபவரே காலபைரவ மூர்த்தியாவார். இவர் ஓருவரே கட்டுப்பாடுகளை மீறி, அவரை வழிப்படுவோருக்கு பல நன்மைகளை செய்ய வல்லவர்.

கால பைரவர் காலத்தை உருவகமாக கொண்ட காலபுருஷன். தனது உடலிலே பன்னிரெண்டு ராசிகளையும் உள்ளடக்கி, பைரவ அவதாரம் அருள் புரிகிறது. தமது ‘சிவாயநம‘ என்ற பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் 84 லட்சம் உயிரினங்களையும் காத்து ஆன்மாக்களை நொடிப் பொழுதில், தனது சூல நூனியினால் தொட்டு, உடன் குறைகளை நீக்கி, காலம் கருதாது காப்பதால் கால பைரவராகின்றார்.

ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஓரு அசுவமேதயாகம் செய்த பலனைத் தருகிறது என்கிறது ஞான நூல்கள்.

பலிபீட பூஜை

ஓவ்வொரு திருக்கோயில் முன்புறமுள்ள பலிபீடம் அஷ்டபைரவர் (அஷ்டத்திக்கும் தன்னுள் கொண்டு) உறையும் இடமாதலால், ஸ்ரீபைரவர் அருள் பெற பலீபீடபூஜை விஷேசமாக போற்றப்படுகின்றது. மனிதர்களுக்கு கோள்களின் சஞ்சார மாற்றகளின் போது ஏற்படும் சகலவிதமான ஆபத்துக்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், குடும்பத்தில் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்க வல்லவர் ஸ்ரீகாலபைரவர்.

வழிபடும் முறைகள்

தாமரைப்பூ மாலை, வில்வ இலையினால் ஆன மாலை, தும்பைப்பூ மாலை, அரளிப் பூ,  சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், அபிஷேகத்திற்கு நல்ல எண்ணெய், பால், தயிர், திரவியப் பொடி, தேன், பன்னீ்ர், இளநீர் போன்ற பொருட்களைக் கொண்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

இவருக்கு வெண்பூசனி வெட்டுதல் சிறப்பு வாய்தது. பொரி, முந்திரி, பருப்பு சுண்டல், கல்கண்டு, எலுமிச்சை சாதம், மிளகு சாதம், வடை, பாயாசம், சர்க்கரைப் பொங்கல் என அனைத்தையும் கொண்டு நெய்வேதியம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல் குழந்தைகள் வரை பிரசாதத்தை உண்ணலாம்.

ஸ்ரீபைரவருக்கு கருப்பு அல்லது சிகப்பு ஆடை கொண்டு சாத்தலாம். சிகப்பு நிறப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். நல்லெண்ணெய் தீபமும் மிளகு தீபமும் ஏற்றி மகிழ்வுடன் வழிபடலாம்.

பைரவருக்கு விரதம் இருக்கும் முறைகள்

சிவபெருமானின் 64 திருவுருவங்களில் ஸ்ரீபைரவர் அவதாரமும் ஓன்று. இவரின் வாகனமாக நாய் உள்ளது. பைரவர் கார்த்திகை மாத தேய்பிறை நாளில் தோன்றினார் என புராணங்கள் மூலம் அறியப்படுகிறது. பைரவர் அவதரித்த காலபைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் அச்சங்கள் நீங்கி, தைரியம் உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

பைரவருக்கு உகந்த நாளில் அதிகாலை எழுந்து சுத்தமாக நீராடி இரு வேளை விரதமிருந்து பைரவர் துதிகளைப் பாடி கோயிலுக்கு சென்று அல்லது வீட்டில் உள்ள பைரவர் முன் மாலை வேலையில் வழிபாடு செலுத்தி வணங்கினால் தீராத வினைகளும் அகலும். விரதம் மேற்கொள்பவர் 21 முறை விரதம் இருந்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

ஸ்ரீகால பைரவர் மந்திரம்

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன், 27 முறை கூறி வழிபட வேண்டும். மாலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

ஸ்ரீகால பைரவரின் 1008 போற்றிகள்

ஓம் கால பைரவனே போற்றி
ஓம் லோகவல்லபனே போற்றி
ஓம் காளிநாயகனே போற்றி

ஓம் காளிப்பிரியனே போற்றி
ஓம் வெள்ளி உடையோனே போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் தீர்த்தராசனே போற்றி
ஓம் புனிதமானவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் தனம் தருபவனே போற்றி         (10)

ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி
ஓம் புகழ் உடையோரே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் பவ்யப்ரியனே போற்றி
ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி
ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி
ஓம் மல்லப்ரியனே போற்றி
ஓம் மனுவே போற்றி
ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி
ஓம் வனங்களின் தலைவனே போற்றி (20)

ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
ஓம் சதியின் கேசவனே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் எங்கள் நாயகனே போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் காளிநாதனே போற்றி
ஓம் சிறந்த புருசனானவனே போற்றி
ஓம் யோகத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி (30)

ஓம் தினகரனே போற்றி
ஓம் தயையே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் சர்வமும் ஆனவனே போற்றி
ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
ஓம் பூதவிநாசகனே போற்றி
ஓம் வடிவே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி (40)

ஓம் அமரப்பிரபுவே போற்றி
ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி
ஓம் பிரஜாபதியே போற்றி
ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி
ஓம் சூர்யபதியே போற்றி
ஓம் ஆராதிப்பவனே போற்றி
ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் தைத்யேஸ்வரனே போற்றி
ஓம் காளிகாதனே போற்றி
ஓம் கோரநாதனே போற்றி (50)

ஓம் தலைச்சடை உடையோய் போற்றி
ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி
ஓம் மகா தபசியே போற்றி
ஓம் ஒளிச்சுடரே போற்றி
ஓம் தயை உடையாய் போற்றி
ஓம் தனேஸ்வரனே போற்றி
ஓம் நதிகளின் தலைவனே போற்றி
ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி
ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதபதியே போற்றி (60)

ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் மல்லகாய போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் மகா வீர்யனே போற்றி
ஓம் வனப்பிரபுவே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் ரவிக்கதிரே போற்றி

ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி (70)

ஓம் திவாகரனே போற்றி
ஓம் காளி நந்தவர்ணனே போற்றி
ஓம் கனாந்தகனே போற்றி
ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் செல்வக் கோடானே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் மந்திரவடிவானவனே போற்றி (80)

ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பலம் உடையவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் மேதாப் பிரியனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி

ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி
ஓம் யாமம் ஆனவனே போற்றி
ஓம் இலக்குமீதரனே போற்றி
ஓம் உக்கிரமானவனே போற்றி
ஓம் சுராதீசனே போற்றி (90)

ஓம் சேவாப் பிரியனே போற்றி
ஓம் சாகரனே போற்றி
ஓம் நாதப்பிரியனே போற்றி
ஓம் வீரவந்தியனே போற்றி
ஓம் காளியின் தலைவனே போற்றி
ஓம் கனமூர்த்தியே போற்றி
ஓம் சனகனே போற்றி
ஓம் யாக புருசனே போற்றி
ஓம் திடமானவனே போற்றி
ஓம் தீட்சாகரனே போற்றி (100)

ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி
ஓம் தீரத்தலைவனே போற்றி
ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி
ஓம் பார்வதி நாதனே போற்றி
ஓம் பலபத்ரனே போற்றி
ஓம் பூதேசனே போற்றி

ஓம் மோகனனே போற்றி
ஓம் மந்திரமே போற்றி
ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சகலமும் அருள்பவனே போற்றி (110)

ஓம் சப்த வடிவமே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் குதிரை தலைவனே போற்றி
ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி
ஓம் பீதி அகற்றுபவனே போற்றி
ஓம் தேவ முதல்வனே போற்றி
ஓம் காளியின் தனமே போற்றி
ஓம் என்றும் இருப்பவனே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி (120)

ஓம் காப்பவனே போற்றி
ஓம் காரியத்தின் தலைவனே போற்றி
ஓம் திவாகரனே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் பூமிக்கரசே போற்றி
ஓம் காசிக்குத் தலைவனே போற்றி
ஓம் பார்வதீ ரமணனே போற்றி

ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி
ஓம் முக்குண உருவே போற்றி
ஓம் மூவுலகிற்கரசே போற்றி (130)

ஓம் மேதாவியே போற்றி
ஓம் மாலதீ நாயகா போற்றி
ஓம் உமை ஒரு பாகமே போற்றி
ஓம் செல்வ நாயகனே போற்றி
ஓம் சாதனனே போற்றி
ஓம் இனிமையின் உருவே போற்றி
ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி
ஓம் அகர முதலானவனே போற்றி
ஓம் பைரவனே போற்றி
ஓம் பலிப்ரியனே போற்றி (140)

ஓம் காளி இதய ஞானமே போற்றி
ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி
ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் காப்புடையாய் போற்றி
ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி
ஓம் பகலோனே போற்றி
ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
ஓம் தீரருக்கு இறைவனே போற்றி

ஓம் நதீஸ்வரனே போற்றி
ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி (150)

ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஆதியானவனே போற்றி
ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி
ஓம் மந்தர நாயகனே போற்றி
ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி
ஓம் மாயை ஆனவனே போற்றி
ஓம் நாவின் சுவையே போற்றி
ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி (160)

ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி
ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி
ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி
ஓம் நான்முகன் தலைவனே போற்றி
ஓம் சராசரம் உடையவனே போற்றி
ஓம் மக்களின் தலைவனே போற்றி
ஓம் இதயநாதனே போற்றி
ஓம் தாவரம் ஆனவனே போற்றி
ஓம் தவத் தெய்வமே போற்றி

ஓம் செல்வ ஒளியோனே போற்றி (170)

ஓம் பூமிநாதனே போற்றி
ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி
ஓம் ஒலியின் ஓசையே போற்றி
ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி
ஓம் மானம் உடையாய் போற்றி
ஓம் கோள்களின் தலைவா போற்றி
ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி
ஓம் மேன்மைக்குரியவனே போற்றி (180)

ஓம் திறமைசாலியே போற்றி
ஓம் காங்கேயன் தந்தையே போற்றி
ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் வழி நடத்துபவனே போற்றி
ஓம் அழகிய வடிவானவனே போற்றி
ஓம் ஆனந்தச் சிலையே போற்றி
ஓம் அடியாந்த காவலனே போற்றி (190)

ஓம் மகா நாதனே போற்றி
ஓம் யமி தேவனே போற்றி
ஓம் ஓங்கியவனே போற்றி
ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் சதி நாதனே போற்றி
ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி
ஓம் உன்னத தெய்வமே போற்றி
ஓம் காளிகா ரமணனே போற்றி
ஓம் கண முதல்வனே போற்றி (200)

ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி
ஓம் தல சோதியே போற்றி
ஓம் செல்வ ராசனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் பாண்டவனே போற்றி
ஓம் பூதங்கள் உடையவனே போற்றி
ஓம் தக்கன தருபவனே போற்றி
ஓம் தருமத்தின் தலைவனே போற்றி
ஓம் மகேசனே போற்றி
ஓம் மனம் அருள்பவனே போற்றி (210)

ஓம் மானிடர்த்தலைவனே போற்றி
ஓம் வெற்றியின் ஈசனே போற்றி
ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி
ஓம் திவ்யம் ஆனவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் கொற்றக் குடையோனே போற்றி
ஓம் நீதி பூசிப்பவனே போற்றி
ஓம் வீரத்தலைவனே போற்றி
ஓம் நாகர் இறைவனே போற்றி
ஓம் உலகினைக் காப்பவனே போற்றி (220)

ஓம் மோகமானவனே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் மல்லனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உயிரினும் உயிரே போற்றி
ஓம் வன வடிவானவனே போற்றி
ஓம் கருணையின் கடலே போற்றி
ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி
ஓம் உடமைகள் தருபவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி (230)

ஓம் குரூரனே போற்றி
ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி

ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி
ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி
ஓம் வில்லிபுத்தூரானே போற்றி
ஓம் தாமிரமே போற்றி
ஓம் குணமெனும் குன்றே போற்றி
ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி
ஓம் செல்வம் உடையாய் போற்றி
ஓம் விண்ணவர் தலைவனே போற்றி (240)

ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி
ஓம் பீம சேனனே போற்றி
ஓம் சற்குணனே போற்றி
ஓம் அனைத்துமானவனே போற்றி
ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் கண்களின் ஒளியே போற்றி
ஓம் கனக மாமணியே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி (250)

ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
ஓம் தத்துவத் தலைவனே போற்றி
ஓம் குருநாதனே போற்றி

ஓம் ஈசானனே போற்றி
ஓம் காமத்தை வென்றவனே போற்றி
ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி
ஓம் வெற்றியின் காரணனே போற்றி
ஓம் ஓங்கார உருவே போற்றி
ஓம் மனத்தை வென்றவனே போற்றி (260)

ஓம் பூவடிவானவனே போற்றி
ஓம் ஸ்ரீமானே போற்றி
ஓம் தலைவனே போற்றி
ஓம் முதலோனே போற்றி
ஓம் நாகத் தலைவனே போற்றி
ஓம் பயங்கர வடிவானவனே போற்றி
ஓம் மஞ்சலாயனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மோட்சம் காப்பவனே போற்றி
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி (270)

ஓம் ராமனே போற்றி
ஓம் வேணுப்பிரியனே போற்றி
ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி
ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி

ஓம் சச்சித்தனே போற்றி
ஓம் சூரர்களின் தலைவனே போற்றி
ஓம் பூதங்களின் தலைவனே போற்றி
ஓம் வெற்றிச் செல்வனே போற்றி
ஓம் விசிஷ்டனனே போற்றி
ஓம் ஞானமே போற்றி (280)

ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி
ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி
ஓம் டங்க நாயகனே போற்றி
ஓம் சமநிலை ஆனவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் செல்வத்தரசே போற்றி
ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி
ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி
ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி (290)

ஓம் தியானத்தின் தலைவா போற்றி
ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி
ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி
ஓம் முழு முதற் பொருளே போற்றி
ஓம் வேள்விப் பொருளே போற்றி

ஓம் வாம வல்லபனே போற்றி
ஓம் சகல கலா வல்லபனே போற்றி
ஓம் அன்பின் ஊற்றே போற்றி
ஓம் ஏழைகளின் துணையே போற்றி
ஓம் இரக்கமிக்கோனே போற்றி (300)

ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் ஓளிப்பிழம்பே போற்றி
ஓம் குமாரனே போற்றி
ஓம் விருத்தனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் உயிர்களின் நாதனே போற்றி
ஓம் வேள்வித் தலைவனே போற்றி
ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி
ஓம் தலத்தின் தலைவனே போற்றி
ஓம் தனஞ்சயனே போற்றி (310)

ஓம் உலகப் பிரியனே போற்றி
ஓம் பழம் பொருளே போற்றி
ஓம் ஆண்களின் தலைவனே போற்றி
ஓம் பலிப்பிரபுவே போற்றி
ஓம் மகத்தானவனே போற்றி
ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி

ஓம் மதுரனே போற்றி
ஓம் மூல முதல் ஆனவனே போற்றி
ஓம் வேள்வியின் இறைவா போற்றி
ஓம் வளங்களின் தலைவா போற்றி 320

ஓம் குளிர்ச்சியே போற்றி
ஓம் வீரத் தலைவா போற்றி
ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி
ஓம் ஞான மயமே போற்றி
ஓம் சித்த ராசனே போற்றி
ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் கடலரசனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் பனிமலை அரசே போற்றி (330)

ஓம் இமயத்தரசே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் மோக மூர்த்தியே போற்றி
ஓம் மானம் காப்பவனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் சய சய ஒளியே போற்றி
ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி

ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி
ஓம் திருவடி முதலே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி (340)

ஓம் செல்வப்ரியனே போற்றி
ஓம் பூ அழகனே போற்றி
ஓம் எங்கும் நிற்பவனே போற்றி
ஓம் உயிர்களின் உயிரே போற்றி
ஓம் முக்கட் சுடரே போற்றி
ஓம் தூய சித்தமே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் மகாபலம் உடையவனே போற்றி
ஓம் தெய்வக் கடலே போற்றி
ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி (350)

ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பாலனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் கபாலனே போற்றி
ஓம் கொற்றக் கொடையோனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் டங்கேசனே போற்றி
ஓம் நிலையான ஞானமே போற்றி

ஓம் மலர்களின் மனமே போற்றி
ஓம் செல்வம் தருபவனே போற்றி (360)

ஓம் பூமியின் கேள்வனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் பக்திக்குரியவனே போற்றி
ஓம் பலிராசனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் மகேஸ்வரனே போற்றி
ஓம் மங்கள நாதனே போற்றி
ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி
ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி
ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி (370)

ஓம் மீன் பிடித்தவனே போற்றி
ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி
ஓம் தீரம் உடையவனே போற்றி
ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி
ஓம் ஒளிவீசுபவனே போற்றி
ஓம் கேடகப் பிரியனே போற்றி
ஓம் வீரியனே போற்றி
ஓம் மலையைக் காத்தவனே போற்றி
ஓம் சீறும் சிவனே போற்றி

ஓம் கணங்களின் தலைவனே போற்றி (380)

ஓம் குணங்களின் தலைவா போற்றி
ஓம் கணங்கள் உடையவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி
ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி
ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி
ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி (390)

ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி
ஓம் வெற்றியின் செல்வமே போற்றி
ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி
ஓம் கள்ளமில்லாதவனே போற்றி
ஓம் புலன்களை வென்றவனே போற்றி
ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் வேத மயிலே போற்றி
ஒம் வீரத்தின் தலைவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி (400)

ஓம் வெற்றியின் வீரனே போற்றி
ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி
ஓம் டகார வடிவமே போற்றி
ஓம் வினாயக ராசனே போற்றி
ஓம் விரதம் ஏற்பவனே போற்றி
ஓம் வில்லாளனே போற்றி
ஓம் ஊற்றமுடையவனே போற்றி
ஓம் நிலையான ராசியே போற்றி
ஓம் காமோதரனே போற்றி
ஓம் அருளும் அப்பனே போற்றி (410)

ஓம் நிலையான ஆதாரமே போற்றி
ஓம் நிரந்தரனே போற்றி
ஓம் உடுக்கை உடையவனே போற்றி
ஓம் வசுபதியே போற்றி
ஓம் அமைதிவடிவே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி
ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி
ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி (420)

ஓம் செல்வனே போற்றி
ஓம் அக்னி தேவனே போற்றி
ஓம் தூயோனே போற்றி
ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி
ஓம் தலப்பிரபுவே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் அக்னியே போற்றி
ஓம் தலப்புதல்வனே போற்றி
ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி (430)

ஓம் தலத்தின் நாயகனே போற்றி
ஓம் நீண்ட தோளனே போற்றி
ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி
ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் எங்கும் பரந்தவனே போற்றி
ஓம் பாரதனே போற்றி
ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி
ஓம் எல்லாம் உடையவனே போற்றி
ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி (440)

ஓம் மண்ணின் நாயகனே போற்றி
ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி

ஓம் நாரதனே போற்றி
ஓம் நிலம் தருபவனே போற்றி
ஓம் பால் குணனே போற்றி
ஓம் மலை அரசன் மனமே போற்றி
ஓம் பாஞ்சாலமே போற்றி
ஓம் பலத்துக்கரசே போற்றி
ஓம் பல் குணனே போற்றி
ஓம் தவ வலி கொண்டவனே போற்றி (450)

ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் பாம்பை உடையவனே போற்றி
ஓம் புருவங்களின் ஈசனே போற்றி
ஓம் புகழ ஓங்கியவனே போற்றி
ஓம் பாலகனே போற்றி
ஓம் மலையின் அரசே போற்றி
ஓம் பலியே போற்றி
ஓம் பாம்பரசனே போற்றி
ஓம் பலிநாதனே போற்றி
ஓம் எங்களின் அன்பனே போற்றி (460)

ஓம் எங்களைக் காப்பவனே போற்றி
ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி
ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி

ஓம் எங்களின் அரனே போற்றி
ஓம் மகரிசியே போற்றி
ஓம் எங்களின் பெருமானே போற்றி
ஓம் வேத முடிவே போற்றி
ஓம் பீமனே போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி (470)

ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி
ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் மகரனே போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மாணிக்கமே போற்றி
ஓம் மெளனியே போற்றி
ஓம் மணிரஞ்சிதமே போற்றி
ஓம் மகீதரனே போற்றி
ஓம் மணி ரம்மியனே போற்றி (480)

ஓம் மனுப் பிரியனே போற்றி
ஓம் மகீப் பிரியனே போற்றி
ஓம் மணி மண்டலமே போற்றி
ஓம் மனு ராசனே போற்றி

ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி
ஓம் மகீ பாலனே போற்றி
ஓம் மகீசாநனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் மாணிக்க ஒளியே போற்றி (490)

ஓம் முக்தனே போற்றி
ஓம் ரமாநாதனே போற்றி
ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் முகுந்தனே போற்றி
ஓம் மணி கூடனனே போற்றி
ஓம் மணிப் பிரியனே போற்றி
ஓம் ரமாபதியே போற்றி (500)

ஓம் பரஞான வடிவே போற்றி
ஓம் ரமா காந்தனே போற்றி
ஓம் தவ வலிவுடையோனே போற்றி
ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் ரமா தீசனே போற்றி

ஓம் நான்மறை முதல்வா போற்றி
ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி
ஓம் எங்களின் நினைவே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் எங்களின் துணைவா போற்றி (510)

ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி
ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி
ஓம் ராம வல்லபனே போற்றி
ஓம் குளிரின் சுகமே போற்றி
ஓம் வன நாயகனே போற்றி
ஓம் சித்தி கரனே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் சீலம் உடையவனே போற்றி
ஓம் அமுதமே போற்றி
ஓம் சனி பகவானே போற்றி (520)ஓம் நண்பனே போற்றி
ஓம் அருள்பவனே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சத்பதியே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சீலனே போற்றி
ஓம் குணாதரனே போற்றி
ஓம் சதியின் ஆத்மாவே போற்றி
ஓம் நெறியே போற்றி (530)ஓம் எண்ணமே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் வேதியே போற்றி
ஓம் தேவர்களின் இறைவா போற்றி
ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி
ஓம் கருமுகில் கண்ணனே போற்றி
ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி
ஓம் தாமரைத் தடாகமே போற்றி
ஓம் சதீஸ்வரனே போற்றி (540)ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி
ஓம் சூரசேனனே போற்றி
ஓம் அமுதக் கடலே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கோவே போற்றி
ஓம் எந்தாய் போற்றி
ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் அரசனே போற்றி (550)ஓம் காபாலியே போற்றி
ஓம் மலையில் வாழ்பவனே போற்றி
ஓம் கமல நாதனே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தர்க்கமே போற்றி
ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி
ஓம் மன்னனே போற்றி
ஓம் மகத அரசனே போற்றி
ஓம் நதி நாயகனே போற்றி
ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி (560)

ஓம் மலர் போன்றவனே போற்றி
ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் சிவசூரியனே போற்றி
ஓம் சோதிப் பரனே போற்றி
ஓம் சய சய போற்றி
ஓம் புதுமையோனே போற்றி (570)

ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி
ஓம் எவர்க்கும் அரசனே போற்றி
ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி
ஓம் தர்கவல்லபனே போற்றி
ஓம் புதனுக்கு அரசே போற்றி
ஓம் இலக்குமயோனே போற்றி
ஓம் வாசல் காப்போனே போற்றி
ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி
ஓம் நற்குணம் உடையவனே போற்றி
ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி (580)

ஓம் குரு பைரவனே போற்றி
ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி
ஓம் நிழலே போற்றி
ஓம் கால தேவனே போற்றி
ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி
ஓம் முகிலே போற்றி (590)

ஓம் தேவே போற்றி
ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பாவம் அறுப்பவனே போற்றி
ஓம் புதன் ஆவியே போற்றி
ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி
ஓம் தேவியின் புதல்வனே போற்றி
ஓம் எரி ஊட்டுபவனே போற்றி
ஓம் யாவும் ஆனவனே போற்றி
ஓம் மாம்பூ உடையோனே போற்றி
ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி (600)

ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி
ஓம் நீங்கா இறைவனே போற்றி
ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி
ஓம் மான் ஏந்தியவனே போற்றி
ஓம் கண்மணியே போற்றி
ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி
ஓம் புனிதனே போற்றி
ஓம் கபால மாலை சூடியவனே போற்றி
ஓம் மலை அரசனே போற்றி
ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி (610)

ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி
ஓம் விதர்க்கமே போற்றி
ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் இலக்குவனனே போற்றி
ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் நந்திப்பிரியனே போற்றி
ஓம் குணங்களின் சிறப்பே போற்றி
ஓம் மாலதீ மலரே போற்றி
ஓம் பைரவ ஈசனே போற்றி
ஓம் தேவர்களின் சுடரே போற்றி (620)

ஓம் கனலே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி
ஓம் கடயோக வல்லவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி
ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி
ஓம் அரசருக்கு அரசனே போற்றி
ஓம் குண்டலீசனே போற்றி (630)

ஓம் தர்க்கசித்தனே போற்றி
ஓம் புத சித்தனே போற்றி
ஓம் இலக்கின் கட்டமே போற்றி
ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி
ஓம் ஆற்றங்கரையோனே போற்றி
ஓம் கேவலனே போற்றி
ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் அமுதம் அருளியவனே போற்றி
ஓம் கரும்பின் இனிப்பே போற்றி (640)

ஓம் கலப்பை உடையோனே போற்றி
ஓம் பொன்னாபரணத்தானே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் கடலின் முத்தே போற்றி
ஓம் திகம்பரனே போற்றி
ஓம் நகப்பிரியனே போற்றி
ஓம் இடாகினி நாயகனே போற்றி
ஓம் மகாகாரனனே போற்றி
ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி (650)

ஓம் புத்தியே போற்றி
ஓம் புத்தொளியோனே போற்றி
ஓம் மறைபொருளே போற்றி
ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி
ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி
ஓம் மாமர வாசனனே போற்றி
ஓம் ஸ்ரீபைரவனே போற்றி
ஓம் அமுத அன்பனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி (660)

ஓம் மேருமலையோனே போற்றி
ஓம் நன்மை செய்வோனே போற்றி
ஓம் குறைவில்லாதவனே போற்றி
ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி
ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி
ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் மகாராசனே போற்றி
ஓம் காலனை வென்றவனே போற்றி
ஓம் புதன் அன்பனே போற்றி (670)

ஓம் அவதாரம் செய்பவனே போற்றி
ஓம் தேவியின் தொண்டனே போற்றி
ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி
ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி
ஓம் மாமர வல்லபனே போற்றி
ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி
ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி
ஓம் தத்துவனே போற்றி
ஓம் நடராசனே போற்றி
ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி (680)

ஓம் பார்வதியின் பாகனே போற்றி
ஓம் எங்களின் கதியே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி
ஓம் பூதப்படையோனே போற்றி
ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி
ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சடையாய் போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் பொருளே போற்றி (690)

ஓம் தேவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் தாரகனே போற்றி
ஓம் கருப்பஞ்சாறே போற்றி
ஓம் தேவி புத்ரனே போற்றி
ஓம் அமுத இனியவா போற்றி
ஒம் மணியே போற்றி
ஓம் நஞ்சுண்டோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் சதுரா போற்றி (700)

ஓம் அருமருந்தே போற்றி
ஓம் காலக் கடவுளே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் சூளாமணியே போற்றி
ஓம் ஞானவிளக்கே போற்றி
ஓம் வித்தின் வித்தே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சோமனே போற்றி
ஓம் மூவுலகாமணியே போற்றி
ஓம் கூர்வாள்படையோய் போற்றி (710)

ஓம் தாப அக்னியே போற்றி
ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் மாம்பழ அழகனே போற்றி
ஓம் பைரவியின் துணையே போற்றி
ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி
ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி
ஓம் அன்னவடிவே போற்றி
ஓம் தேசவிளக்கே போற்றி
ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி (720)

ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் கபாலபாணியே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் செம்பொன் மேனியனே போற்றி
ஓம் சோமநாயகனே போற்றி
ஓம் வாட்படை கொண்டாய் போற்றி
ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி
ஓம் கெளரவனே போற்றி (730)

ஓம் மேன்மை ஆனவனே போற்றி
ஓம் நன்மையறிவாய் போற்றி
ஓம் மாமிசப்ரியனே போற்றி
ஓம் ஹரிநாதனே போற்றி
ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி
ஓம் அரன் வடிவே போற்றி
ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி
ஓம் ஈசான திசையோனே போற்றி
ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி
ஓம் காபாலியே போற்றி (740)

ஓம் தேவரறியாத தேவனே போற்றி
ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் தர்க்கப் பிரியனே போற்றி
ஓம் புத நாதனே போற்றி
ஓம் எதிலும் உள்ளவனே போற்றி
ஓம் மரிகிதனே போற்றி
ஓம் நந்திகேச்வரனே போற்றி
ஓம் குணோபேதனே போற்றி
ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி (750)

ஓம் அஷ்ட பைரவனே போற்றி
ஓம் மலையில் உள்ளவனே போற்றி
ஓம் சம்காரம் செய்பவனே போற்றி
ஓம் புன்சிரிப்பே போற்றி
ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி
ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் பொறுமைக்கரசே போற்றி
ஓம் மாயோனே போற்றி
ஓம் உர்வாங்கனே போற்றி (760)

ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் நாமங்கள் உடையவனே போற்றி
ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் அதிரூபனே போற்றி
ஓம் மரீசியே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் குருப்ரியனே போற்றி
ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி
ஓம் கணங்களை உடையவனே போற்றி (770)

ஓம் வார்சடை விரும்பியே போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் உலகேழும் ஆனவனே போற்றி
ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி
ஓம் அன்ன நடையோனே போற்றி
ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் பொறுத்தருள்பவனே போற்றி
ஓம் காலபுருசனே போற்றி
ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி
ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி (780)

ஓம் இடாகினி இதயமே போற்றி
ஓம் அம்பிகா வல்லவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி
ஓம் சுக்ரனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் வேள்விப்பொருளே போற்றி
ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி
ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி (790)

ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி
ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி
ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி
ஓம் பொறுமையின் வடிவே போற்றி
ஓம் கருணைப் பார்வையனே போற்றி
ஓம் அம்பேசனனே போற்றி
ஓம் இடாகினி பாகனே போற்றி (800)

ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி
ஓம் மங்கலமே போற்றி
ஓம் கோலாடைக் குழகரே போற்றி
ஓம் நரர்களின் தேவனே போற்றி
ஓம் தேவியின் பிராணனே போற்றி
ஓம் கோபவர்த்தனே போற்றி
ஓம் சகதீசனே போற்றி
ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி
ஓம் மதுபாயனே போற்றி
ஓம் பொன்னே போற்றி (810)

ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி
ஓம் பூதத் தலைவனே போற்றி
ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி
ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி
ஓம் நொடியை அருள்பவனே போற்றி
ஓம் பொறுமையின் கலையே போற்றி
ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி
ஓம் கபால கவசவிரும்பியே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி (820)

ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி
ஓம் சோமப் பிரபையே போற்றி
ஓம் நாற்களை படைப்பவனே போற்றி
ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி
ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி
ஓம் மதுப்பிரியனே போற்றி
ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி
ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி (830)

ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி
ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி
ஓம் செந்நிறத்தோனே போற்றி
ஓம் உலகச் சுடரே போற்றி
ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி
ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி
ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி
ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி
ஓம் பொறுமையே போற்றி (840)

ஓம் புதாகரனே போற்றி
ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி
ஓம் தேவேந்திரனே போற்றி
ஓம் நந்தனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் காரணனே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி (850)

ஓம் லயம் செய்பவனே போற்றி
ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி
ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி
ஓம் நீலமே போற்றி
ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி
ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி
ஓம் மர்மங்களை உடையவனே போற்றி
ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி
ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பெளத்த காமனனே போற்றி 860

ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி
ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி
ஓம் குணசிந்தனே போற்றி
ஓம் ஞானமூர்த்தியே போற்றி
ஓம் தவவலிமை உடையோய் போற்றி
ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் தென்னவன் செல்வமே போற்றி
ஓம் அன்ன ஒளியோனே போற்றி
ஓம் உலகத் தலைவனே போற்றி 870

ஓம் பொறுமை உடையவனே போற்றி
ஓம் நீலமணி ஒளியோனே போற்றி
ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி
ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி
ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி
ஓம் திசை மலைகளே போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் காமனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880

ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி
ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் காலங் கடந்தவனே போற்றி
ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி
ஓம் மூலத்து முதலே போற்றி
ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி
ஓம் பொறுமை மனமே போற்றி
890

ஓம் சூலக்கரத்தோனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் கனகச் சுடரே போற்றி
ஓம் திசைகளின் அரசனே போற்றி
ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி
ஓம் காமத்தை வெல்பவனே போற்றி
ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி
ஓம் குணரம்மியனே போற்றி
ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி
900

ஓம் கணங்களின் அரசே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி
ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி
ஓம் முழு முதல் வித்தே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி
ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி
ஓம் யானை வாகன அழகனே போற்றி
ஓம் பெரிய நாயகனே போற்றி
910

ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி
ஓம் திக்குகளின் தலைவனே போற்றி
ஓம் விமானம் ஆள்பவனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் தமிழின் அழகே போற்றி
ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி
ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி
ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி
ஓம் சக்கரத்து அரசே போற்றி
920

ஓம் பழச்சுவை அமுதே போற்றி
ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி
ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி
ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி
ஓம் பேச வைப்பவனே போற்றி
930

ஓம் மங்கலாகரனே போற்றி
ஓம் மனவடிவே போற்றி
ஓம் குருவாகி நின்றவனே போற்றி
ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி
940

ஓம் அதிபதியே போற்றி
ஓம் நிழல்தரு மரமே போற்றி
ஓம் பாடுவோரின் பாடலே போற்றி
ஓம் விரிசடையோனே போற்றி
ஓம் பரமசிவனே போற்றி
ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி
ஓம் பல்லூளித் தலைவா போற்றி
ஓம் பித்தனே போற்றி
ஓம் பொறுமை வடிவே போற்றி
ஓம் உலக நலமே போற்றி
950

ஓம் உலக நாதனே போற்றி
ஓம் நொடிக் காலமே போற்றி
ஓம் உலகநாயகனே போற்றி
ஓம் நீலவாணனே போற்றி
ஓம் வாள் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் நீலமணி ஒலியோனே போற்றி
ஓம் மேன்மை அருள்பவனே போற்றி
ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
960

ஓம் தாளாண்மை உடையவனே போற்றி
ஓம் நாக வல்லபனே போற்றி
ஓம் பற்பல உயிரோனே போற்றி
ஓம் வேல் ஏந்தியவனே போற்றி
ஓம் வசனப் பிரியனே போற்றி
ஓம் எங்களின் கோவே போற்றி
ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி
ஓம் பொன்மலையோனே போற்றி
ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி
ஓம் ஆவிவடிவே போற்றி
970

ஓம் எங்கும் உள்ளவனே போற்றி
ஓம் சோம சித்தனே போற்றி
ஓம் சோமேஸ்வரனே போற்றி
ஓம் நிமலா போற்றி
ஓம் காசியைக் காத்தவனே போற்றி
ஓம் நாகர்களின் இறைவனே போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் மகிழ்ச்சியே போற்றி
ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி
980

ஓம் குணமே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் ஒலிக்கு இறைவா போற்றி
ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இறைவனே போற்றி
ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் பொய்யா புகழே போற்றி
990

ஓம் மரகத அதிபதியே போற்றி
ஓம் சிவலோக அதிபதியே போற்றி
ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி
ஓம் ஆவி நாயகனே போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
ஓம் அறந்த முடி நெறியே போற்றி
ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி
ஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி
ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
(1000)

ஓம் இகபோகம் ஈவாய் போற்றி
ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி
ஓம் அழியாச் செல்வம் போற்றி
ஓம் அமிர்த கரும்பே போற்றி
ஓம் காலமும் தேசமும் போற்றி
ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!!
(1008)

இவ்வாறு ஸ்ரீகால பைரவரை நினைத்து மனதார வணங்கி விரதம் இருந்து 1008 போற்றிகளை அஷ்டமி அன்று ஜெபித்து வந்தால் பலவித நன்மைகள் உண்டாகும். பைரவரின் பரிபூரண அருள் கிடைக்கும். அனைத்துவித தடைகளும் நீங்கி சௌபாக்கியம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here