Home சினிமா காந்தாரா ரிஷப் ஷெட்டியை கடிதம் அனுப்பி நெகிழ வைத்த கமல்ஹாசன

காந்தாரா ரிஷப் ஷெட்டியை கடிதம் அனுப்பி நெகிழ வைத்த கமல்ஹாசன

0
10

ரிஷப் ஷெட்டி: நடிகர் கமல்ஹாசன் ‘காந்தாரா’ படத்தைப் பாராட்டி ரிஷப் ஷெட்டிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். இந்த கடிதத்தில் கமல் ‘காந்தாரா’ குறித்து தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். இந்த கடிதத்தில் இருப்பதாவது.

‘காந்தாராவைப் பார்த்த அன்று தான் இந்தக் கடிதத்தை எழுதினேன். காந்தாரா நம் மனதில் பதிந்து இருக்கிறது. படத்தின் கடைசி காட்சிகளும் பிரமாதம். ஊர் முழுவதையும் கடவுள் அன்னை வடிவில் காக்கும் காட்சி நன்றாக உள்ளது. காந்திஜியின் அபிமானியின் சில வரிகளை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். காந்திஜியைப் பற்றி ஒருவர் கேட்கிறார். உங்கள் அடுத்த இலக்கு என்ன? இதற்கு அவர்  பதிலளிக்கையில் நான் இந்த நாட்டிற்கு தாயாக வேண்டும். ஒரு தாயால் மட்டுமே அந்த கருணை காட்ட முடியும். உங்கள் படத்தில் எம்.டி.வாசுதேவனின் நிர்மால்யத்தில் ஒரு உன்னதமான சாயல் உள்ளது. உங்களின் அடுத்த படம் ‘காந்தாரா’ சாதனையையும் முறியடிக்கட்டும்’ என்று கமல் கடிதம் எழுதியுள்ளார்.

kamal hasan writes a appreciation letter to kantara actor rishab shetty

கடிதத்தின் புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி ‘இந்த கடிதம் இந்திய சினிமாவின் ஜாம்பவான் கமல்ஹாசனிடமிருந்து வந்துள்ளது. கமல் சாரிடம் இருந்து இந்த சர்ப்ரைஸ் பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விலைமதிப்பற்ற பரிசுக்கு நன்றி சார்’ என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். ரிஷப் ஷெட்டியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here