மும்பையில் வீடு வாங்கியுள்ளார் நடிகை சமந்தா அதிநவீன வசதிகளுடன் கடலின் அழகை பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்த லக்சரி வீட்டை சமந்தா வாங்கி உள்ளார்.
மயோனிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா பல மாதமாக வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அப்போது தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் யசோதா படத்தின் ரிலீசை மருத்துவமனையிலிருந்து கண்டு வருவதாகவும் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்திருந்தார்.
அவரது ரசிகர்களும் சமூக வலைதளத்தின் மூலம் STAY STONG SAMANTH என்று டிவிட் செய்து வந்தனர். இந்நிலையில், அந்த மயோனிஸ் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா படுபிசியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த சமந்தா கடந்த 10 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.

தென்னிந்திய நடிகர்கள் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டிற்கும் தென்னிந்திய இயக்குனர்கள் தேவைப்படுகிற அளவிற்கு மவுசு கூடியுள்ளது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா குட்பை, மிஷின் மஜ்னு உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்று தற்போது, அனிமல் என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறப்பு அம்சம் கொண்ட லக்சரி வீட்டை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து படுபிசியாக வலம் வரும் நிலையில் அவரும் தனது ஓய்வு நேரங்களிலை இனிமையாக்க கடல் அலைகளின் ஓசையுடன் அதன் அழகை ரசிக்கும் படியான இடத்தில் வீடு ஓன்றை ரூ 15 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மயோனிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா இனி நடிக்க வருவது கடினம் என்று அனைவரும் கூறிய நிலையில் தனது விடாமுயற்சியால் பல திருப்பங்களை தனது வாழ்க்கையில் நிகழ்த்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்: ஸ்னீக்பீக்குக் காட்சியாக பிச்சைக்காரன் 2 டிரைலர் இன்று மாலை வெளியீடு
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.