தென்னிந்திய விருதுகள் விழாவில் சிவகாா்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான வருது

0
11

சிவகாா்த்திகேயன்:  இவா் சமீபத்தில்  நிகழ்ந்த சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் டாக்டா் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார். இந்த படத்தில் சிவகாா்த்திகேயன் அவர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்பு அவா் நடித்த படங்களில் காமெடி மிக முக்கியமான அம்சமாக இடம் பெற்றிருக்கும். பின்பு காதல் மற்றும் சண்டை காட்சிகள் என எல்லா படங்களிலும் மிகவும் கலகலப்பாக நடித்திருப்பார்.

டாக்டர் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் மி்கவும் அமைதியான நகைச்சுவை இல்லாத சிவகாா்த்திகேயனை பாா்க்க முடிந்தது. இதுவரை அவா் ஏற்காத கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக அதற்கு வலு சோ்த்திருந்தாா். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தாா். யோகி பாபு, அா்ச்சனா, தீபா, அா்ச்சனா மகள் ஜாரா ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.

sivakarthikeyan gets SIIMA Awardஇப்படத்திற்கு அனிருத் அவா்கள் இசையமைத்திருந்தார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் சிவகாா்த்திகேயன் அவா்கள் எழுதி அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி அவா்கள் இருவரும் பாடிய மெழகு டாலு நீ பாடல் மிகவும் பிரபலமடைந்தது. சிவகாா்த்திகேயன் அவா்கள் விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்று பின்பு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக பிரபலமடைந்தாா்.

பிறகு 3 படத்தில் தனுஷின் நண்பராக நடித்து பிறகு மொினா படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவா் நடித்த  அனைத்து படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாா். இப்பொழுது டாக்டா் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை சிவகாா்த்திகேயன் அவா்கள் பெற்றிருப்பது அவரது இரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here