சூர்யா 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் அதிரடி காட்சிக்காக ஜிம் ஓன்றில் 50 பேருடன் மோதுவது போன்ற சண்டை காட்சிக்காக ரிஸ்க் எடுத்து நடிக்கும் சூர்யாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முதன் முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்துள்ள சிறுத்தை சிவா சிறந்த வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில் சூர்யா பல காட்சிகளில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மெனக்கெட்டு நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 13 முக்கிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். படக்காட்சிகள் சென்னை துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பிரம்மாண்ட செட் போட்டு நடிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு சூர்யா 42 என்று பெரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரும் செலக்சன் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளனர். முன்னணி கதாநாயகராக வலம் வரும் சூர்யா தான் நடிக்கும் படங்களில் முக்கிய காட்சிக்காக மெனக்கெடல்களை செய்து வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், படத்தில் விமான நிலையம் போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் அதிரடி சண்டை காட்சிகள் நிகழ்வுது போன்ற படக்காட்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படக்காட்சி விரைவில் முடிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: உலக அளவில் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெறும் பதான் திரைப்படம்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.