நடிகர் சூர்யாவை இயக்கும் பாலா படத்தின் பெயர் வணங்கான் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க இயலாத நடிகராகவும் சமூக அக்கரையுடனும் செயல்படும் நடிகர் சூர்யா அவர் குடும்பமே சமூக வேவை செய்கிறது என்றால் மிகையாகாது. சூர்யா திரைப்படங்களில் எந்த கேரைக்டர் கொடுத்தாலும் அக்கேரைக்டராகவே பிரதிபலிப்பார். மேலும் நன்றாக மெனக்கட்டு சிறப்பான தோற்றங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் நடிகர் சூர்யாவின் 41 வது படம் இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தின் பெயரை வணங்கான் என வெளியிட்டுள்ளது படக்குழு.

இயக்குனர் பாலாவுடன் நடிகர் சூர்யா இணைவது இது இரண்டாவது முறை இதற்கு முன் பிதாமகனில் இருவரும் இணைந்தனர் அதன் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 2டி எண்டர்பிரைஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் சூர்யா ஓரு மீனவனாக நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது. அதனால் கன்னியாகுமரி பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் இரண்டாம் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், சிவாவின் இயக்கத்தில் ஒரு பீரியட் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் பாலாவும் சூர்யாவும் இணைந்துள்ள படம் ஆதலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இயக்குனர் பாலாவின் பிறந்தநாளான இன்று சூர்யாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்டு உள்ளது தயாரிப்பு நிறுவனம்.