இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பு காந்தாரா திரைப்படம்-ரஜினிகாந்த்

0
8

இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பு காந்தாரா திரைப்படம் என நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு.

”தெரிந்ததை விட தெரியாதது அதிகம் என்பதை சினிமாவில் இதைவிட யாரும் சிறப்பாக யாரும் சொல்லியிருக்க முடியாது. இந்த படம் இந்திய சினிமாவில் மிகச் சிறந்த படைப்பு. காந்தாரா படத்தை எழுதி, இயக்கி, நடித்து அசத்தியுள்ள ரிஷிப் ஷெட்டிக்கு எனது பாராட்டுக்கள் படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பு காந்தாரா திரைப்படம்-ரஜினிகாந்த்

பல முக்கிய மொழிகளில் இப்படம் ரீலிஸ் ஆகியுள்ளது. இப்போது தான் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல கருத்துகளை பெற்று வருகின்றது. படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்தும், படத்தை பாராட்டியும் எழுதி வருகின்றனர். காந்தாரா படம் ஆஸ்கருக்கு தகுந்தது எனவும், படத்தின் மேக்கிங் கண்டிப்பாக ஆஸ்கர் வாங்கும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #KantaraForOscars என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் படத்தை பார்த்து படக்குழுவுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

இப்படம் வசூலிலும் கேஜிஎப்ன் சாதனையை முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்தியா முழுவதும் இப்படம் அனைவரிடமும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நடிகர் தனுஷ் முன்னரே பாராட்டியுள்ளார். இந்நிலையில், இப்படத்தை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here