தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்குக்காக அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் (PANIC BUTTON) அமைக்கபட உள்ளது. பேருந்துகளில் ஏற்படும் குற்றங்களை கண்டறியவும் உரிய நபர்களுக்கு சரியான தீர்வு காணவும் பேருந்துகளில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை களைந்து பெண்கள் நல்முறையில் பயணம் செய்யவும் ஏற்படுத்தப்படுவது பேனிக் பட்டன்.
முன்னதாக சென்னை மாநகர பேருந்துகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிட தக்கது. மாநகரப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக பேனிக் பட்டன் அபாய ஓலி எழுப்பும் சாதனம் ஓருங்கினைந்த GPS கருவியோடு பொருத்தப்பட்டு, சிசிடிவி கேமராவும் 500 பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 2800 பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தனர்.

நரிகுறவர்களை பேருந்துகளில் ஏற்றுவதில்லை என்றும் பேருந்து நடத்துனர் ஓரு சிலர் பயணியிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும் பெண்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை என்றும் பலர் கூறி வந்ததை அடுத்து இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக பெண்களின் சுய பாதுகாப்பு நோக்கத்திற்காக பல மொபைல் செயலிகள்பயன்பாடுகளில் இருந்தாலும், பதிலளிப்பு நேரம் மிக அதிகமாக உள்ளது மற்றும் எச்சரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அடையும் முன் குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.
பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பேருந்து நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் தவறு செய்பவர்களை கண்டறியவும் இந்த புதிய கருவி உதவும் என போக்குவரத்து ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றன. Panic button பற்றிய விழிப்புணர்வை அரசு உருவாக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘பேனிக் பட்டனை’ அறிமுகப்படுத்தியுள்ளது, தமிழக அரசு.
பேருந்துகளில் பெண்கள் யாரேனும் பயணம் செய்யும் போது பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் உடனே பெண்கள் பேணிக் பட்டனை உபயோகித்து தலைமையகத்திற்கு தகவல் கொடுக்கலாம். பேருந்தின் CCTV மூலம் கண்ணகாணிக்கப்பட்டு பேருந்து வழிதடத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து தூரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.