கொரோனா வைரஸ் 2019 ல் சினாவின் ஊகான் மாகானத்திலிருந்து பரவியது என்பது அனைவரும் அரிந்ததே. கொரோனா தொற்றின் கோர முகத்தை நாம் இன்னும் பார்க்கவில்லை என்று மைக்ரோ சாப்ட் நறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
உலக மக்களை பயமுறுத்தும் எண்ணம் எனக்கு இல்லை அவசியமும் இல்லை அனால் கொரோனா இன்னும் வேகமாகவும் வீரியத்துடனும் கோரத் தாண்டவம் ஆட உள்ளது. இன்னும் அபாயகரமாக இருக்கும் அதன் தொற்று என்று எச்சரிக்கிறார். உலக கோடிஸ்வர்களின் ஓருவரான பில்கேட்ஸ்.

2015 ம் ஆண்டிலிருந்தே தாம் கொரோனா தொற்று போன்றதொரு உலக பேரழிவு ஏற்படுத்தும் என எச்சரித்ததாக 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது டிவிட்டர் கண்கில் பதிவு செய்திருந்தார்.
மார்ச் 2020 வரையான காலகட்டத்தில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 6.2 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீப வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் பெருமளவு சரிவடைந்துள்ளது.
இதனிடையே WHO தலைவர் Dr. Tedros Adhanom Ghebreyesus கொரோனா தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். கொரோனா பரவல் தொடர்பில் உலக நாடுகள் பல தங்கள் கண்காணிப்பை விலக்கிக்கொண்டுள்ளதாகவும், இது ஆபத்தை வரவழைக்கும் போக்கு என அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பில் கேட்ஸ் கொரோனா தொடர்பில் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், உலக நாடுகள் பெருந்தொற்று தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க போதிய வசதிகளை கட்டமடைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.